தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இச்சபைக்கு அரசியல் நியமனங்கள் மூலம் பெருமளவிலான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களில் 70 வீதமானவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில், மிலான் ஜயதிலக்க எம்பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையில் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் ரீதியாகவே கடந்த காலங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேற்படி சபையில் தற்போது பல்வேறு பிரிவுகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மேலும் சில பிரிவுகளில் மேலதிக ஊழியர்கள் காணப்படுகின்றனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)