261
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்ட விசேட மாநாடுகள் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளன. கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட மாநாடுகளில் முதலாவது மாநாடு இன்று (13) காலை காலி நகர மண்டபத்தில் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன
தலைமையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
14ஆம் திகதி தங்காலை மற்றும் களுத்துறையிலும், 15ஆம் திகதி இரத்தினபுரியிலும் விசேட மாவட்ட மாநாடுகள் நடைபெறவுள்ளன.