Home » சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி அபகரிப்பு

சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி அபகரிப்பு

பேசாலையில் சம்பவம்

by Gayan Abeykoon
December 28, 2023 6:13 am 0 comment

பேசாலையில் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி பட்டப்பகலில் இனந்தெரியாத நபரொருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இனந்தெரியாத நபரொருவர் பேசாலை ஆலயத்துக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சில பொருட்களை திருடியதுடன் ஆலய வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியையும் திருடிச்சென்றுள்ளனர்.

அருகிலிருந்த கடையொன்றில் சீசீரிவி கமராவை பொலிஸார் பரிசோதித்தபோது திருடியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மன்னார் தீவுக்குள்ளேயே இருப்பதாக சந்தேகப்பட்டு பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமன்னார் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT