பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி திடீர் பொதுத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
தனது டோனிங் வீதி அலுவலகத்திற்கு முன்னாள் நேற்று முன்தினம் பேசிய 44 வயதான சுனக், ‘பிரிட்டன் நாட்டவர்கள் தமது எதிர்காலத்தை தேர்வு செய்வதற்கு தற்போது நேரம் வந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்ற அவர், எதிர்கொள்ளும் முதல் தேர்தலாக இது அமையவுள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களே தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.