66
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக பதவியேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கு மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவரை வரவேற்கும் முகமாக சர்வதேச கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வொன்று திங்கட்கிழமை (6) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கோபியோ இலங்கை கிளையின் தலைவர் குமார் நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.