65
திருகோணமலையின் மூதூர் கமநல சேவைகள் நிலையப் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குழி குளத்தை அண்டிக் காணப்படும் மேட்டுநிலத்தில் தற்போது மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைக்கால பயிரினமாக பல்லின வகை மரக்கறிச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் மரக்கறி உற்பத்தியை பெருமளவில் உற்பத்தி செய்து பொருளதார நிலையை மேம்படுத்தும் முகமாகவும் மரக்கறிச் செய்கைக்கு தேவையான நீரை குளம் மற்றும் தோட்டக் கிணறுகள் மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி காணப்படுவதாலும் தாம் பல்லின மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
மூதூர் தினகரன் நிருபர்