Sunday, May 19, 2024
Home » கிண்ணியாவில் காட்டு யானை அட்டகாசம்; 03 வீடுகள் சேதம்

கிண்ணியாவில் காட்டு யானை அட்டகாசம்; 03 வீடுகள் சேதம்

by Gayan Abeykoon
May 8, 2024 5:12 am 0 comment

திருகோணமலையின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  உப்பாறு கிராம அலுவலர்  பிரிவின்  சோலைவெட்டுவான் மேல் குடியேற்ற பிரதேசத்தில்  நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் காட்டு யானையொன்று புகுந்து மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக, அப்பிரதேசவாசிகள்  தெரிவித்தனர்.

காட்டுப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்து இந்த யானை  வீடுகளை உடைக்கும் போது, அவ்வீடுகளில் இருந்தவர்கள் கதறி அழுதுகொண்டு வெளியேறியதுடன்,   அயலவர்களை உதவிக்கு அழைத்தனர்.  இந்நிலையில் யானைக்கு  வெடி போட்டு யானையை காட்டுக்குள் விரட்டியதாகவும், அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், அப்பிரதேசவாசிகள் கூறினர்.

கிண்ணியா மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT