Sunday, May 19, 2024
Home » நாடு திரும்பினார் மதீஷ பதிரண

நாடு திரும்பினார் மதீஷ பதிரண

by damith
May 6, 2024 6:00 am 0 comment

இந்திய பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகிய நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பங்கேற்காத பதிரண, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டார் இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடையும் வகையில் அவர் இலங்கை திரும்பியுள்ளார். ‘தசைப்பிடிப்பு பிரச்சினை காரணமாக சென்னை அணியின் வீரர் மதிஷ பதிரண இலங்கைக்கு திரும்பி சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார். அவர் விரைவில் குணமடைய சென்னை அணியின் சார்பில் வாழ்த்துகிறோம்’ என சென்னை அணி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டி20 உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நிலையிலேயே அவர் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT