வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவியை மீண்டும் வரவழைக்கும் நோக்கில் தனது 4 வயதான பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நப ர் பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தனது மகளை கவனிக்கும் பொறுப்பை கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சிறுமி யின் தாய் வெளிநாடு ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட இச்சிறுமி தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபர் பலாங்கொடை மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி குணமடைந்த பின் அவரது தாயாரிடம் ஒப்படைக்கவும் அவரது தாயார் திரும்பி வரும் வரை சிறுவர் நலன்காப்பு பிரிவில் வைத்துப் பராமரிக்கவும் ஒழுங்கு செய்யப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்