முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அழுத்கமகே, சகல குற்றச்சாட்டுக்களிலுமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வீட்டைக் கொள்வனவு செய்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுக்க ளிலிருந்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அமைச்சுப் பதவி வகித்தபோது வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு, கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தார் என பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் மேற்படி வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பையே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்