ஹம்பாந்தோட்டை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளிலிருந்து இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்குமான இலவச விழிப்புணர்வு செயலமர்வு ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் (28) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கான அனுசரணையினை முஸ்லிம் ஏய்ட் நிறுவனம் வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
ஹம்பாந்தோட்டை ஸ்மார்ட் சிட்டி குழுவோடு இணைந்து ஹம்பாந்தோட்டை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் குழுவினரும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் வளவாளராக பஸ்லான் ஏ காதர் கலந்துகொண்டதோடு ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம். எம். எம். ரிஸான், பிரதி அதிபர் எம். சீ எஸ். பாயிஸா, யுவதிகள் குழுவின் தலைவி முன்னாள் பிரதி அதிபர் டி. யு. எஸ். அரூஸியா, ஆசிரியை என்.எப். நதீரா மற்றும் எம். ஏ. எப். அப்ராஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்