82
சிவனொளிபாதமலை அடிவாரத்திலுள்ள விகாரையில், 14 அடி உயரம் கொண்ட பித்தளை சமன் தெய்வ சிலை மற்றும் இரண்டு யானைகளின் சிலைகள் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
அவை , கொழும்பு கங்காராம விகாரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (21) காலை ஊர்வலமாக கண்டி தலதா மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்றுமுன்தினம் காலை தலதா மாளிகையிலிருந்து ஊர்வலமாக பேராதெனிய,கம்பளை,உலப்பனை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா நகர் வழியாக சிவனொளிபாதமலை அடிவாரத்திலுள்ள விகாரையில் நேற்று காலை, சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.