இம் முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதியும் பரீட்சை பெறுபேற்றை உயர்த்தும் நோக்கிலும் மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கொன்றை வெலிகம பத்ர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
வெலிகம அறபா மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கு காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை மாணவ, மாணவிகளுக்கு வெவ்வேறாக இடம் பெறவுள்ளது.
கணிதம், வரலாறு, இஸ்லாம், விஞ்ஞானம், மற்றும் தமிழ் ஆகிய பாடங்களே இடம் பெறவுள்ளன. இக் கருத்தரங்கு சனி, ஞாயிறு தினங்களில் இடம் பெறவுள்ளது. மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்களால் இவை நடாத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு மாதிரி வினாப் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வெலிகம தினகரன் நிருபர்)