Home » பெண்களுக்கான ஒரு மாத வலுவூட்டல் பிரச்சாரத்தை நிறைவுசெய்த SDB வங்கி

பெண்களுக்கான ஒரு மாத வலுவூட்டல் பிரச்சாரத்தை நிறைவுசெய்த SDB வங்கி

by Rizwan Segu Mohideen
April 21, 2024 9:27 pm 0 comment

பெண்களை வலுவூட்டலானது SDB வங்கியின் அதன் துவக்கம் முதலான வியாபாரத்திற்கான அணுகுமுறையின் மையமாக விளங்குவதுடன் அதனது நிறுவன சிந்தனாதளத்திலும் ஆழமாக வேரூன்றிய அம்சமாகவும் காணப்படுகின்றது.

வங்கியின் வெற்றிகரமான இருமுக அணுகுமுறையானது நிறுவனத்திற்குள்ளிருந்து பெண்களை வலுப்படுத்தல் மற்றும் வெளியிலிருந்து பெண்களிற்கு ஆதரவளித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ்வர்ப்பணிப்பானது சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கல் என்பவற்றிலான வங்கியின் விளம்பரப்படுத்தல்களில் சான்றாவதுடன் உயர் தலைமைத்துவ பதவிகளிலான குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தினையும் உள்ளடக்கியதான 48% பெண்களாகக் காணப்படும் அதனது ஊழியப்படையின் உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

தேசம் முழுவதிலுமான பெண்களை வலுவூட்டுவதற்கு அதனது பரந்த பயணத்துடனாக நிறுவனத்திற்குள்ளான பெண்களை அங்கீகரிப்பதற்கும் அஞ்சலி செலுத்துவதற்குமான அதனது முயற்சிகளை பிணைப்பதான, ஒரு தனித்துவமான இலத்திரனியல் ஊடக பிரச்சாரத்தினை மாதம் முழுவதிலுமாக செயற்படுத்தியுள்ளமையினால் மார்ச் மாதமானது SDB வங்கிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமிக்கதாக விளங்கியது. இப்பிரச்சாரத்தின் ஊடாக, வீரமும் அர்ப்பணிப்பும் மிக்க கதைகளை பகிர்ந்தும், எதிர்ப்பின் பலமிக்க செய்தியை வழங்கியும் SDB வங்கியானது தங்களது நிலைகளிலான பெண்களது அளப்பரிய பங்களிப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தது.

பிரச்சாரத்தின் ஊடாக வலுவினதும் எதிர்ப்பினதும் செய்திகளை வெளிப்படுத்தியதன் நோக்கமானது அக்கருத்தானது அமோக வரவேற்பினைப் பெற்றும் சமூக ஊடகங்களில் நாடளாவிய ரீதியில் உயர் ஆரோக்கிய அடைவுகளைப் பெற்றுக்கொண்டமையினாலும் அமோக வெற்றியினை அடைந்திருந்தது. பரந்தவொரு பெறுநர்களுடன் பொருளார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திய இக்கதைகளானவை பல பெண்களில் ஒத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த பலவருடங்களாக பெண்களை வலுவூட்டுவதனை, குறிப்பாக இலங்கை முழுவதிலுமான பெண் சுயதொழில்வாண்மையாளர்களிற்கான அதன் ஆதரவினை மீள்வரையறுப்பதிலான வங்கியினது தற்போதைய முயற்சிகளிற்கான ஒரு ஊக்கமாக இவ்வெற்றியானது எதிர்பார்க்கப்பட்டது. கிராமப் புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மையாளர்களை முடுக்கிச்செல்லும் ஒரு முக்கிய சக்தியாக, SDB வங்கியானது ஆயிரக்கணக்கான சுயதொழில்வாண்மையாளர்களை அடையாளப்படுத்தல், கல்வியளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அவர்களது வெற்றிக்குத் தேவைப்படும் நிதியுதவிகளை வழங்குதல் என்பவற்றினால் இலங்கைப் பெண்கள் மத்தியில் சுயதொழில்வான்மையை வினையூக்கப்படுத்தியுள்ளது. இம்முயற்சிகள் சர்வதேச அங்கீகாரங்களை தேடித்தந்துள்ளதுடன், பெண்களது வலுவூட்டல் துவக்கங்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட யுஎஸ் இன்டர்நேஷனல் டிவலெப்மென்ட் பினான்ஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து (ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்) 40 மில்லியன் அ.டொலர் மானியத்தினை சமீபத்தில் பெற்றுக்கொண்டமை போன்ற கணிசமான பால்நிலை நிதியிடல்களில் விளைவினை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களது வலுவூட்டலிற்கான வலுவான அர்ப்பணிப்புடன், SDB வங்கியானது பெண்கள் வெற்றிகொள்வதற்காக வலுவூட்டப்படும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமிகு பங்களிப்புக்களை வழங்கும் மிகவும் உள்ளீர்ப்பும் சமத்துவமும் நிலவும் சமூகமொன்றினை வளர்த்தெடுப்பதினை நோக்கிய முக்கிய நகர்வுகளை மேற்கொள்வதனைத் தொடர்கின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT