வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ‘உரித்து’ திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடமாகாணத்தில் 60,000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.
வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரம்
கைமாற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
119
previous post