155
தென்னாபிரிக்காவை தோற்கடித்து உலக சாதனை வெற்றி ஒன்றை பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு சுமார் ஒரு கோடி ரூபா விசேட பணப் பரிசு ஒன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் சமரி அத்தபத்துவுக்கு விசேட பாராட்டுகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மகளிர் அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் பணப்பரிசு வழங்கப்படவிருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் உயர் அதிகாரிகள் பலர் வெளிநாட்டில் இருப்பதால் அந்தப் பரிசுத் தொகையின் பெறுமதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.