அநுராதபுர மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 130 புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் நதீக்கா விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த 2019 மற்றும் 2023 காலப்பகுதியில் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த காலகட்டத்தில் சுமார் 4000 சிறுநீரக நோயாளிகள் இந்த நோயினால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் ( 2023 ) 1200 புதிய சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் இவர்களில் அதிகமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட இப்பகுதிகளில் கிடைக்கும் நீரின் பயன்பாடு வரட்சியான காலநிலையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மரபியல் பரவல் போன்றவையும் சிறுநீரக நோய்க்கு காரணம் எனவும் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் நதீக்கா விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
திறப்பனை தினகரன் நிருபர்