111
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்று வேக கட்டுப்பாட்டை மீறி கடந்த திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.
மாநகரசபையினால் அண்மையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமடைந்துள்ளன. தெய்வாதீனமாக வாகனத்தில் பயணித்த எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.
விபத்து தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)