Thursday, May 16, 2024
Home » மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

by Gayan Abeykoon
April 11, 2024 4:42 pm 0 comment

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் தனது வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.  திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

திங்கட்கிழமை (08) தனிமையில் தனது வீட்டில் வெல்டிங் – இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்ததாகவும் பின்னர் அவரது சகோதரி மற்றும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுணதீவு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT