Sunday, May 12, 2024
Home » முஸ்லிம் சமூகத்தின் அர்ப்பணிப்புக்கு நன்றி

முஸ்லிம் சமூகத்தின் அர்ப்பணிப்புக்கு நன்றி

- பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பெருநாள் செய்தி

by Rizwan Segu Mohideen
April 10, 2024 10:33 am 0 comment

பண்டைய காலந்தொட்டு முஸ்லிம்கள் ரமழானின் போது தங்கள் மத விடயங்கள் மற்றும் சடங்குகளை அர்ப்பணிப்புடன் கடைப்பிடித்து, ஏனையவர்களுக்கும் உதவி வருகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கலாசார மற்றும் மத பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள்.

நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறை, கல்வி, பல்வேறு தொழில்சார் துறைகள், விளையாட்டு மற்றும் கலாசார விடயங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் பங்களிப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் கடினமான இலக்குகளை அடைவதற்காக முஸ்லிம் சமூகம் இக்காலப்பகுதியில் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் யாவும், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலப்பகுதியில் அதிக உறுதியுடன் தொடரும் என நான் மேலும் எதிர்பார்க்கிறேன்.

ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்!

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

ரமழானில் முன்னெடுத்த விழுமியங்கள் சிறந்த வழிகாட்டியாக அமையட்டும்

சகோதரத்துவத்தின் கரங்கள் வலுப்பெற பிரார்த்திக்கிறேன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT