Monday, May 20, 2024
Home » வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு

by mahesh
April 10, 2024 10:20 am 0 comment

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் (வயதான) மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று முன்தினம் (08) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை தெரிவுசெய்யப்பட்ட வயதான கலைஞர்கள் 102 பேருக்கு மாதாந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவியாக ரூ.7,500 வழங்கப்பட்டு வருகிறது. டவர் மண்டப மன்றத்தின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை, இந்தக் கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி இம்மாதம் முதல் டவர் மண்டப மன்றத்தினால் வயதான 122 கலைஞர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
“இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு

பிரதமர் தினேஷ் குணவர்தன

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT