Tuesday, May 21, 2024
Home » பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவையில் அனுமதி
மின்சார சபை திருத்த சட்டமூலம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவையில் அனுமதி

இவ்வாரம் வர்த்தமானி வெளியீடு

by mahesh
April 10, 2024 10:10 am 0 comment

மின்சார சபை திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதையடுத்து இந்த வாரத்தில் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அதனை சவாலுக்கு உட்படுத்தும் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT