Monday, May 20, 2024
Home » அகரகந்தை தோட்ட அருள்மிகு மாடசாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா

அகரகந்தை தோட்ட அருள்மிகு மாடசாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா

by mahesh
April 10, 2024 12:10 pm 0 comment

நாகசேனை -அகரகந்தை தோட்ட அருள்மிகு மாடசாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று காலை அலங்கார பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூன்று நாட்களாக நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவில் (10) ஆம் திகதி காலை விசேட பூசைகள் இடம்பெற்று இரவு 12 மணியளவில் மாடசாமி சுவாமிக்கு பலி பூஜை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து 11ஆம் திகதி காலை கங்கையில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்னர் பிற்பகல் 12 மணிக்கு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அன்று மாலை வருடாந்த விழா இனிதே நிறைவுபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(ஆ.ரமேஷ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT