இலங்கை இராணுவத்தின் 241 படைப்பிரிவுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஒருதொகுதி பாதுகாப்பு காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் இராணுவத்தின் 241 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டீ.என்.பதிரத்னவிடம் அண்மையில் கையளித்தார். இந்நிகழ்வில் பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட் கலந்துகொண்டார்.
இராணுவத்தின் 241 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டீ.என்.பதிரத்னவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினையடுத்தே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் ஒரு தொகுதி பாதுகாப்பு காலணிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பாலமுனை விசேட நிருபர்)