Thursday, May 16, 2024
Home » கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் நேற்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் நேற்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு

by sachintha
April 9, 2024 6:02 am 0 comment

அடுத்த கட்ட நிர்மாணப் பணிகள் செப்டெம்பருக்குள் நிறைவு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளை செப்டெ ம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு மருந்தான ‘றிடொக்ஸ்டெஜ்’ ஆகிய மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவர்கள் அல்லது இன்றுவரை நோயாளிகளாக உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு வழங்குமாறும் அதேவேளை, எதிர்வரும் வழக்கு தினத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி அந்த அறிக்கை தொடர்பான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தினார். இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான அயுசுலேற் பயோடெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளரான சுகத் ஜானக்க பெர்னாண்டோ மூலம் டெண்டர் முறைமையின் பின்னர் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு பெற்றுக்கொடுத்துள்ள மேற்படி மூன்று ஊசி மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டதா? அவ்வாறானால் அந்த மருந்துகள் எந்தெந்த வார்ட்டுகளுக்கு அனுப்பப்பட்டன? அந்த மருந்துகளை வழங்கிய பின்னர் ஏதாவது கடும் நோய் அல்லது அந்த நோயாளிகளில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்றும் அத்துடன் நோயாளிகள் மரணமடைந்துள்ளார்களா என்றும் அதேவேளை இன்றும் எவரும் நோயாளிகளாக காணப்படுகின்றனரா? அவ்வாறானால் அந்த நோயின் ரகம் என்ன? அதுதொடர்பிலான விசேட தன்மையென்ன? மரணமடைந்தவர்கள் இருப்பார்களாயின் அவர்களது மரண விசாரணை அறிக் கை மற்றும் நோயாளியின் தொலைபேசி இலக்கம், முகவரியுடன் முழுமையான அவரது விபரங்கள் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்திற்கு வழங்கப்படவேண்டுமெனவும் சுகதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அது வழங்கப்பட்டுள்ளதா என்றும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT