Sunday, May 19, 2024
Home » தோட்ட ஆலய திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை

தோட்ட ஆலய திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை

- நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

by Prashahini
April 7, 2024 10:10 pm 0 comment

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய திருவிழா இடம்பெறும் வேளையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக இன்று (07) மாலை முதல் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் தனியார் பஸ்கள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக 60 மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும் 28 பேர் இது வரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து நோயாளிகள் வருகை காரணமாக வைத்தியசாலையில் அனைத்து பகுதியினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியசாலையில் இல்லாமல் உள்ள மருந்துகள் தனியார் மருந்தகங்களில் பெற்று செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

இதன்போது பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 28 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணீர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT