Wednesday, May 22, 2024
Home » SLFP வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல

SLFP வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல

நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைப்பேன் - மைத்திரி

by Gayan Abeykoon
April 5, 2024 1:00 am 0 comment

லங்கா சுதந்திரக் கட்சித் தலைவராக செயற்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பாக

SLFP வரலாற்றில் இது…

நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீதிமன்றத்துக்கு சென்று முறைப்பாட்டு மனு மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க இடைக்கால தடை உத்தரவை பெற்றுக்கொண்டார்.

எனினும் நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பான ஆவணங்கள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இத்தகைய சவால்கள் புதிதல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அநுர பண்டாரநாயக்க போன்றோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கினர். 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர் கட்சியானது 17 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டியதாயிற்று.

எமது கட்சியிலுள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் சென்றுள்ளனர். அதனால் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக சில முடிவுகளை எடுத்தது. அமைச்சர் பதவியின் பேராசையால் அவ்வாறு அவர்கள் செயற்பட்டார்களே தவிர நாடு, கட்சி, மக்கள் மீதுள்ள அன்பினால் அல்லவென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT