115
வவுனியாவில் இடம்பெற்ற சித்திரை கலைவிழாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டது.
வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் நகரசபை மைதானத்தில் சித்திரை கலைவிழா நிகழ்வு நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. இதன்போது பல்வேறு விடயங்களை மையப்படுத்திய கண்காட்சிக்கூடங்களும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதூர் நாகதம்பிரான் கோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வவுனியா விசேட நிருபர்