அலிசப்ரி ரஹீம் எம்.பி வழங்கி வைத்தார்
புத்தளம் பாலாவி பிரதேசத்தில் 121 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பினை தனது சொந்த நிதியிலிருந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவர்களுள் 76 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு குடிநீர் இணைப்பினை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 45 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு பாலாவி மளிகாபுரம் பாலர் பாடசாலையில் அண்மையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆசிரியர் எச். அமீர் அலி, பாலாவி இணைப்பாளர் பஸீர் மரிக்கார், “சமகி” நீர் விநியோகத் திட்டத்தின் தலைவர் பாலித்த, உப தலைவர் ரமீஸ் உள்ளிட்ட நீர் விநியோகத் திட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசியலுக்கு அப்பால் செய்கின்ற நிலையான தர்மங்களுள் இதுவும் ஒன்றாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
புத்தளம் தினகரன் நிருபர்