150
பியகம முதலீட்டு சபைக்கு உட்பட்ட TOS Lanka Co. (Pvt) Ltd நிறுவனம், சிறைக் கைதிகளை பகுதிநேர அடிப்படையில் வேலைக்கு அமர்த்தும் (CSR) Corporate social responsibility என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த TOS லங்காவின் தலைவர் Jitsuo Mikasa, சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பித்தார். இதற்கு அரச நிறுவனம் சாதக பதிலளித்ததை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத் திட்டத்தின் கீழ் கைதிகளுக்கான சில வேலைகள் சிறைச்சாலை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இவ்வேலைகளை சிறைக்கைதிகள் மேற்கொள்வர். அதிகரித்த கொடுப்பனவுகள் இதற்காக வழங்கப்படும்.