Saturday, May 11, 2024
Home » சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உறுதி பூணுவோம்

சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உறுதி பூணுவோம்

- பிரதமரின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

by Rizwan Segu Mohideen
March 31, 2024 10:32 am 0 comment

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம். இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா நாளில் உறுதிபூணுவோமாக.

தைரியத்துடன் நன்னோக்கங்களை அடைவதற்காக மனிதனை பாவத்திலிருந்து விடுவித்து சமூக நீதி, அன்பு, கருணை மற்றும் மனித நேயத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் வாழ்வு சிறந்த முன்னுதாரணமாகும்.

எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையின் போதும், அதற்கு தேவையான மனநிலையை எம்மிடம் உருவாக்க சமய போதனைகள் எமக்கு பெரிதும் உதவுகின்றன.

இது அன்பையும் கருணையையும் பரப்பிய இயேசுவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் கிடைத்த உயர் விழுமியங்களை மீண்டும் மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டிய காலம்.

அவற்றின் மூலம் வளம் பெற்று எமது உள்ளங்களை புதியதோர் மாற்றத்தை நோக்கி வழிநடத்தி, அன்புணர்வுடன் இந்த உயிர்ப்பு பெருவிழாவை அலங்கரிப்போம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

தாங்கிக்கொள்ள இயலுமான தேசமாக உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம்

அன்பு உயிர்த்தெழும் நாளுக்காக நாம் காத்திருக்கிறோம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT