113
சர்வமத தலைவர்கள் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின் பங்குபற்றுதலுடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் கலந்து கொண்டதுடன், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பங்குபெற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா விசேட நிருபர்