Sunday, May 12, 2024
Home » முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூகநல செயற்றிட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூகநல செயற்றிட்டங்கள்

by Gayan Abeykoon
March 29, 2024 9:36 am 0 comment

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூகநல செயற்றிட்டங்கள் பல ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகக் குழாய் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் புதிய நீர் விநியோகக் குழாய் பதிப்பு நிர்மாண வேலையையும் இராஜாங்க அமைச்சர் நேற்றையதினம் (28) ஆரம்பித்து வைத்தார். அத்துடன் இந்நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற மரநடுகை நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT