வட மாகாணத்தின் மைலோ கால்பந்து சம்பியன்சிப் தொடரின் இறுதிச் சுற்றில் ஆடுவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 10 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட 11 ஆடவர் மற்றும் மகளிர் பாடசாலை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திற்காக கடந்த மார்ச் 16 ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 22 அணிகள் பங்கேற்றன. இதில் 12 மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவுகளில் இரணைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணிகள் வெற்றியீட்டின.
12 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் விவேகானந்தா மகா வித்தியால அணி வெற்றிபெற்ற நிலையில் 10 வயது பெண்கள் பிரிவில் திருவையாறு மகா வித்தியாலயம் அணி வெற்றிபெற்றது.
மைலோ கால்பந்தாட்ட சம்பியன்சிப் இறுதிச் சுற்றுப்போட்டி நாளை (23) யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் நடைபெறவுள்ளது.