தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் எமது நிகழ்வுகளில் கலந்து அவற்றின் செய்தி, புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய, கொழும்பு குணசேகர புரயை சேர்ந்த தினகரன் நிருபர் எஸ். ஏ. கரீம் அவர்களின் மறைவு கவலை தருவதாக முபாறக் அப்துல் மஜீத் கவலை தெரிவித்துள்ளார்.அன்னாரின் இழப்புக்குறித்து அவர் ெவளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முபாரக் அப்பதுல் மஜீத் தெரிவித்துள்ளதா வது: ஊடகவியலாளர் எஸ்.ஏ.கரீம் அமைதியாகச் செயலாற்றிய ஊடகவியலாளர்.அன்னாரின் பங்களிப்புக்கள் எமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்களித்தன. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் பாலித்து கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு, ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அனுதாபம் தெரிவித்துள்ளார்.