Monday, May 20, 2024
Home » பெருந்தோட்டப் பயிராக பாக்கு உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

பெருந்தோட்டப் பயிராக பாக்கு உற்பத்தியை மேம்படுத்த திட்டம்

17 இலட்சம் பாக்கு மரக் கன்றுகள் விநியோகம்

by mahesh
March 20, 2024 11:50 am 0 comment

பெருந்தோட்டப் பயிராக அல்லாமல் ஊடுபயிராக தற்போது உற்பத்திச் செய்யப்படும் பாக்கை ஏற்றுமதிப் பயிராக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர ஏற்றுமதி விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைவாக இந்த வருடம் 17 இலட்சம் பாக்கு மரக்கன்றுகள் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக 37.5 மில்லின் ரூபாவை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் கூறினார்.

தற்போது நாட்டில் 13 ஹெக்டேயர் காணியில் பாக்கு உற்த்தி செய்யப்பட்டுவருகிறது. பாக்கு மர மொன்றில் வருடத்தில் ஆயிரம் பாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட பாக்கு மரக்கன்றுகளை விவசாய அமைச்சு அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

பாக்கு ஏற்றுமதியின் மூலம் மாதாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்படுகின்றன. தற்போது வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துவருகின்றது.

2021ஆம் ஆண்டில் இலங்கையில் 23ஆயிரத்து 890 மெற்றிக் தொன் பாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 24ஆயிரத்து 323 மெட்ரிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதேபேன்று 2023ஆம் ஆண்டு 34ஆயிரத்து 771 தொன் மெட்ரிக் தொன் பாக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் நாட்டுக்குக் கிடைத்த வருமானம் 86ஆயிரத்து 680 மில்லியன் ரூபாவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT