125
அம்பாறை மாவட்ட புதிய சமுர்த்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமது ஷாபீர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) தனது கடமையை பொறுப்பேற்றார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அவர் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், சமுர்த்தி முகாமையாளர்களாகிய பலர் கலந்து கொண்டனர்.
திராய்க்கேணி தினகரன் நிருபர்