ரிட்ஸ்பரி-ஓல்கொட் பாடசாலைகள் அஞ்சலோட்ட விளையாட்டு விழாவில் ஆடவர் பிரிவில் ராஹுல கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றதோடு மகளிர் பிரிவில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி சம்பியனானது.
மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த முன்னணி பாடசாலை மாணவர்களின் மெய்வல்லுநர் திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன.
இந்த நிகழ்வை ராஹுல கல்லூரி, ராஹுல கல்லூரியின் விளையாட்டு கழகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் விளையாட்டு மையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வுக்கு சிபிஎல் வர்த்தக நாமத்தின் சொக்லட் நாமமான ரிட்ஸ்பரி பிரதான அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.