73
மூதூர் வேதத்தீவு ஆறு மற்றும் இடிமண் ஆறுகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துவருவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வழமையாக இப்பகுதிகளில் நீராடச் செல்பவர்களையும், நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களையும் செல்ல வேண்டாமென வேதத்தீவு சமூக சேவை அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறுகளில் நன்னீர் மீன்பிடியில் தினமும் பெருமளவில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் நீராடச் செல்பவர்களின் பாதுகாப்புக் கருதி இவ்வாறுகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அமைப்பினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(மூதூர் தினகரன் நிருபர்)