Monday, May 20, 2024
Home » உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

- நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் சம்பவம்

by Prashahini
March 14, 2024 3:20 pm 0 comment

நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று (14) காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 – 5 ஆம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 மாணவிகளும் 6 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு விசமானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT