Wednesday, May 15, 2024
Home » யாழ். வலி வடக்கில் 67 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ். வலி வடக்கில் 67 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

- 33 வருடங்களின் பின் நாளை கையளிப்பு

by Rizwan Segu Mohideen
March 9, 2024 3:23 pm 0 comment

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நாளை (10) ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது.

காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும், வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும், மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களுக்கு, அப்பகுதி கிராம சேவையாளர்களால் நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT