Monday, May 20, 2024
Home » வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி கட்டடத்துடன் மோதி விபத்து

வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி கட்டடத்துடன் மோதி விபத்து

சாரதி படுகாயம்

by Gayan Abeykoon
March 8, 2024 9:19 am 0 comment

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி நேற்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.    இதேவேளை அருகிலிருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளானது.

கோவில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அலுவலகமே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.    சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பருத்திதுறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT