Monday, May 20, 2024
Home » இலங்கையரின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கல்
இந்தியாவுக்கு அகதிகளாக சென்று திரும்பிய

இலங்கையரின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கல்

by Gayan Abeykoon
March 7, 2024 8:55 am 0 comment

யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை  வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அகதிகளாக இந்தியா சென்ற இலங்கையர்கள், இந்தியாவில் தங்கியிருந்த  போது அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கே   இலங்கை பிரஜாவுரிமை வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டது.

யுத்தம் முடிந்த  பின்னர் மீண்டும் இலங்கை திரும்பிய அவர்களின் பிள்ளைகள்,  இலங்கை பிரஜாவுரிமையை பெறுவதில் சிக்கலை  எதிர்நோக்கினர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT