141
யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அகதிகளாக இந்தியா சென்ற இலங்கையர்கள், இந்தியாவில் தங்கியிருந்த போது அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கை பிரஜாவுரிமை வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டது.
யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் இலங்கை திரும்பிய அவர்களின் பிள்ளைகள், இலங்கை பிரஜாவுரிமையை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கினர்.
வவுனியா விசேட நிருபர்