Wednesday, May 15, 2024
Home » யாழ்.பல்கலைக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

யாழ்.பல்கலைக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

- பல்கலை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

by Prashahini
March 7, 2024 11:13 am 0 comment

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேற்று (06) விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

குறித்த சந்திப்பின்போது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் உட்பட கல்வித் துறையில் கூட்டுத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT