Monday, May 20, 2024
Home » அஸ்வெசும 2ஆம் கட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல்

அஸ்வெசும 2ஆம் கட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல்

அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர்

by mahesh
March 6, 2024 1:00 pm 0 comment

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் தெரிவித்தார்.

இதற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தத்தமது பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரினூடாக பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், அவர் கேட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத சமுர்த்தி பெறுபவர்கள், முதியோர்கள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித்தொகை பெறுவோர்கள் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்பார்ப்பவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

அஸ்வெசும முதலாவது கட்டத்துக்காக விண்ணப்பிக்க முடியாது போன அல்லது விண்ணப்பிக்கத் தவறிய நலன்புரி நன்மைகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

தற்போது ஏதேனும் நலன்புரிவு திட்டத்தில் பயன் பெறுபவராயின் அதன் தன்மை அல்லது யாதேனும் நலன்புரி முன்மொழிவு திட்டத்தில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவராயின் அதன் தன்மையும் குறிப்பிட வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT