திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமெனவும், அதற்கு தன்னால் முடிந்த அனைத்து பக்களிப்புகளையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தௌபீக் எம்.பி. வாழ்த்துத் தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு எமது மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த தி/கிண்/ அல் – அமீன் வித்தியாலாய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்றேன்.இம்மாணவர்களை வழிநடத்திய பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.