சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் இன்றி சமூக பாதுகாப்பு உதவுத் தொகை வரி திருத்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாதென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர் இதனை வலியுறுத்தினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சமூகப் பாதுகாப்பு உதவுத் தொகை வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ள போதிலும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இ)து தொடர்பான பரிந்துரை எதுவும் முன்வைக்கப்படவில்லை என அறியமுடிகிறது.
சமூக பாதுகாப்பு உதவுத் தொகை புரள்வை வைத்தே அறவீடு செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான சட்ட வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாததால், நுகர்வோர் மீது திணிக்கும் சூழ்நிலை நிலவுவதாலும்,வற் வரி அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை திருத்தச் சட்டமூலங்கள் இரண்டையும் எதிர்க்கட்சி எதிர்க்கிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புகள் இன்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)