258
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (04) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிலே, இவர்களுக்கு இத்தீர்ப்பளிக்கப்பட்டது.இவ்விரு பொலிஸாரையும் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடப்பட்ட நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று மரண தண்டனை விதித்துள்ளது.
மேற்படி வழக்கு தொடர்பில் நீண்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்