எதிர்காலத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தரம் 1-5 வரை ஆரம்பக் கல்வி நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேலதிக கற்றலுக்கு கொடுக்கும் அழுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும், புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்தினாலும் அதற்குத் தேவையான சூழல் தயாரிக்கப்படும் எனவும் வகுப்பறைக்கு வெளியே புற செயல்பாடுகளில் மாணவர்களின் திறமையை மதிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.