Tuesday, May 14, 2024
Home » ஹூதி தாக்குதலினால் சரக்குக் கப்பல் மூழ்கியது

ஹூதி தாக்குதலினால் சரக்குக் கப்பல் மூழ்கியது

by Rizwan Segu Mohideen
March 4, 2024 2:28 pm 0 comment

அதென் வளைகுடாவில் இரண்டு வாரங்களுக்கு முன் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது.

ருபிமார் என்ற இந்தக் கப்பல் நீரில் தத்தளித்து வந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி சில நாட்களின் பின் மூழ்கியதாக யெமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு குறிபிட்டுள்ளது. செங்கடலில் உள்ள கப்பல்களை இலக்கு வைத்து யெமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் மூழ்கிய முதல் கப்பல் இதுவாகும்.

உரத்தை எடுத்துச் சென்ற இந்தக் கப்பல் மூழ்கியது சூற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கப்பல் பாப் அல் மன்தாப்புக்கு அருகில் அதென் வளைகுடாவில் இருந்தபோதே யெமனைத் தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் இரு ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அந்த கப்பலில் இருந்த 24 பேரும் மீட்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரசு பத்து நாட்களுக்கு முன் தெரிவித்தது.

172 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் பிளைஸ் கொடியுடன் லெபனான் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT